Rahu Ketu Peyarchi 2022

Rahu ketu peyarchi 2022
திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 12.4.2022 மதியம் 1 மணி 48 நிமிடத்துக்கு பெயர்ச்சி அடைகிறார்கள். இந்த ராகு -கேது பெயர்ச்சி ரிஷபம், மிதுனம், சிம்மம், விருச்சிகம், தனுசு, கும்பம் ராசிக்காரர்களுக்கு பிரபலமான யோகத்தை தரக் கூடியதாக இருக்கிறது.
ராகு எந்த நட்சத்திரத்தில்?
ராகு கேது பெயர்ச்சி 2022: பரணி நட்சத்திரத்தில் பயணிக்கும் ராகு.. யாருக்கு அள்ளித்தரப்போகிறார் சென்னை: ராகு பகவான் மேஷ ராசியில் சூரியனின் கார்த்திகை நட்சத்திரத்தில் இருந்து சுக்கிரனின் பரணி நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார்.
ராகு கேது என்பவர்கள் யார்?
பாம்பு தலையும் மனித உடலும் - ராகு கேது யார்? சென்னை: ராகுவும் கேதுவும் நேர் எதிர்திசையில் நட்சத்திர மண்டலத்தில் சஞ்சரிக்கின்றர். மனித தலையும் பாம்பு உடலும் கொண்ட கிரகம் ராகு எனவும், பாம்பு தலையும் மனித உடலும் கொண்ட கிரகம் கேது எனவும் அழைக்கப்படுகின்றனர்.
ராகு கேது தோஷம் பார்ப்பது எப்படி?
ஒருவரது ஜாதக லக்னத்தில் ராகு அல்லது கேது இருந்தாலும், அதற்கு ஏழாமிடத்தில் ராகு/ கேது இருந்தாலும், இரண்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், எட்டாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும், ஐந்தாம் இடத்தில் ராகு /கேது இருந்தாலும் தோஷத்தைத் தரும்.
ராகு திசை என்ன செய்யும்?
ஒருவருக்கு ராகு தசை இளமைக் காலங்களில் வரும் பொழுது, அவர் தனிமையை விரும்புவார். மதிய உறக்கம் தானாக வரும். நல்லது கெட்டது போன்ற விஷயங்களில், கலந்து கொள்ளமாட்டார். போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் வரும்.
ராகு கேது இடையில் கிரகங்கள்?
மதுரை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகுவுக்கும், கேதுவுக்கும் இடையில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன்,வியாழன், வெள்ளி, சனி ஆகிய கிரகங்கள் இருந்தால் அவை கால சர்ப்ப யோகம் எனப்படும். ராகு, கேது இரண்டுக்கும் இடையில் மற்ற ஏழு கிரகங்களும் அடங்கியிருக்கும். கால சர்ப்ப தோஷத்தை யோகமாகவும் கருதலாம்.
பரிகார செவ்வாய் என்றால் என்ன?
ஜாதகத்தில் லக்னத்திற்கு 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் செவ்வாய் இருந்தால், இந்த அமைப்பிற்கு செவ்வாய் தோஷம். இந்த அமைப்பு கொண்ட ஆண், பெண் இருவரின் ஜாதகங்களை சேர்ப்பதன் மூலம் தோஷம் சமன் அடைகிறது. தோஷம் என்றுதான் சொல்வார்களே தவிர பெரும்பாலான ஜாதகங்களில் தோஷ நிவர்த்தியும் ஏற்பட்டு இருக்கும்.
நாக தோஷம் இருக்கிறதா என எப்படி கண்டுபிடிப்பது?
சந்திரனுக்கு முன்னாலோ, அல்லது பின்னாலோ ராகு நின்றால் நாக தோஷம் இருப்பதாக கொள்ள வேண்டும். ஒருவர் ஜாதகத்தில் சந்திரனுக்கு இரண்டிலோ அல்லது பன்னிரண்டிலோ ராகு தனித்து நின்றால் நாக தோஷம் உண்டு. ஒருவர் ஜாதகத்தில் லக்னத்தில் ராகு, ஏழாம் இடத்தில் கேது இருந்தால் அந்த ஜாதகருக்கு நாகதோஷத்தால் திருமண தடை ஏற்படும்.
களத்திர தோஷம் என்றால் என்ன?
களத்திர தோஷம் என்றால் என்ன? லக்னம், சந்திரன் மற்றும் சுக்கிரன் இவர்கள் இருக்கும் இடத்திலிருந்து ஜாதகத்தில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 4, 7, 8, 12 ஆகிய இடங்களில் இருந்தால் அல்லது ஒன்றாக சேர்ந்து இருந்தாலோ அது களத்திர தோஷம் எனப்படும்.
புதன் புத்தி என்ன செய்யும்?
புதன் மகாதிசை, புதன் புத்திப் பலன்கள் புதமகாதிசை மொத்தம் 17 ஆண்டுகளாகும். இதில் புதனது சுயபுத்தி 2 வருடம் 4 மாதம் 27 நாள்களாகும். இக்காலகட்டத்தில் நிகழும் பலன்களாவன: மூதாதையரின் கூட்டும் அதனால் மகிழ்ச்சியும் இன்பமும் நேரும். குலதெய்வம் மனமொன்றி இருந்து குடும்ப நலத்தைக் காக்கும்.
8 ல் ராகு இருந்தால் என்ன பலன்?
ராகு பகவான் சுப கிரக பார்வைகள் இல்லாமல் அல்லது சுப கிரகங்களுடன் சேர்க்கை பெறாமல் 8 ஆம் இடத்தில் இருந்தால் அவர்களுக்கு விபத்தின் மூலமாக மரணம் ஏற்பட இடம் உண்டு. 9. அதே போல, கேது 8 ஆம் இடத்தில் வீற்று இருந்தால் விலங்குகளால் கண்டங்கள் ஏற்பட இடம் உண்டு.
லக்கினத்தில் செவ்வாய் இருந்தால் என்ன நடக்கும்?
லக்கினத்தில் வேறு பாபக் கிரகங்களும் சேர்ந்தால் மிகவும் கடுமையான வார்த்தைகளைப் பேசுவார். பலம் பெற்ற செவ்வாய் கோபப்படுத்துவார்.
செவ்வாய் கிழமை என்ன செய்யலாம்?
செவ்வாய் கிழமை முருகனுக்கு உரிய விசேட நாளாகும். முருகனை வணங்கி துவங்கும் காரியங்கள் சிறப்பாக முடியும் என்பது நம்பிக்கை. கேரள மக்கள் செவ்வாய்க்கிழமையில் திருமணம் நடத்துகின்றனர். முருகனையும் பூமாதேவியையும் வழிபட்டு செவ்வாயில் மங்கல பொருட்கள் வாங்கினால் அது பன்மடங்காக பெருகும் என்பது நம்பிக்கையாகும்.
குஜன் என்றால் என்ன?
நவகிரகங்களில் சூரியனுக்கு அடுத்தபடியாக பராக்கிரமம் மிக்க, செயல் ஆற்றல் உள்ள கிரகம் செவ்வாய். இதற்கு அங்காரகன், மங்களன், குஜன், சேய் என வேறு பல பெயர்களும் உண்டு.
திருமணம் நடக்க என்ன செய்ய வேண்டும்?
விரைவில் திருமணம் கைகூட பெண்கள் செய்ய வேண்டிய பரிகாரங்கள்: உங்கள் அறையில் இளஞ்சிவப்பு நிற திரைச்சீலைகள் மற்றும் வால் பேப்பர்களை பயன்படுத்தவும். குங்குமப்பூவை உட்கொள்ளவும். வியாழன் தோறும் அரச மரத்தின் அடியில் நெய் தீபம் ஏற்றவும். ALSO READ | கேது பெயர்ச்சி 2022: 'இந்த' ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும்!
புதன் கடவுள் யார்?
இந்துத் தொன்மவியலில், புதன் (Budha, சமக்கிருதம்: बुध) என்பது மெர்க்குரி கோளுக்குக் கொடுக்கப்பட்ட பெயரும், நிலாவின் (தாராவுடன் அல்லது ரோகினியுடன்) மகனும் ஆவார். இவர் வணிகர்களின் கடவுளும் அவர்களின் பாதுகாப்புமாகும்.
சனி திசை என்றால் என்ன?
ஒருவருக்கு சனி தசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார். அடுத்து அதனை இல்லாமல் போகச் செய்வார். முடிவில் அதனை வட்டியும் முதலுமாக உரியவருக்கே திருப்பிக் கொடுப்பார். இப்படி மனிதனை பக்குவப்படுத்தும் நடவடிக்கையை சனி பகவான் மேற்கொள்கிறார்.
ஜாதகத்தில் முதல் கட்டம் எது?
ஜாதக கட்டம் விளக்கம்:- ஒருவரின் ஜாதக கட்டத்தில் இருக்கும் ல/ என்று போடபட்டிருக்கும் லக்ன கட்டம் தான் முதல் வீடு ஆகும். ஒருவரின் தனிப்பட்ட அங்க அடையாளங்கள் மற்றும் ஆளுமை திறன், திறமைகள், மரியாதை, அறிவு, வலிமை சார்ந்தவற்றை குறித்து காட்டுகிறது இந்த லக்ன கட்டத்தில்.
எட்டில் சுக்கிரன் இருந்தால் என்ன பலன்?
பொதுவாக 8வது வீட்டில் சுக்கிரன் இருந்தால் நல்லது. “இறந்தாரை எழும்ப வைக்கும் சஞ்சீவி மந்திரம் கற்றவன் சுக்கிரன்” என வேதங்கள் கூறுகின்றன. ஜோதிடத்தைப் பொறுத்தவரை 8ஆம் இடம் ஆயுள் ஸ்தானமாகும். அந்த இடத்தில் சுக்கிரன் அமர்ந்தால் அஷ்டலட்சுமி யோகம் கிடைக்கும்.
எட்டில் குரு இருந்தால் என்ன பலன்?
எட்டில் குரு அஷ்ட குரு எட்டாம் வீடான அஷ்ட ஸ்தானத்தில் குரு இருந்தால் நீண்ட ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும். திடீர் பணவரவு கிடைக்கும். வாழ்க்கை அமைதியாக இருக்கும். அதே நேரம் குரு தனித்தோ பாவிகள் சேர்க்கை பெற்றோ இருந்தாலே பலம் இழந்து இருந்தாலே நோய் பாதிப்பு ஏற்படும்.








Post a Comment for "Rahu Ketu Peyarchi 2022"